பெய்ஜிங்: சீனாவில் 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்நாட்டின் உகான் நகரில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறிப்பட்டது. இப்போது 200க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் சீனாவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆகையால் அந்நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இந் நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா 2வது அலை ஆரம்பித்து இருக்கிறது.

24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  57 பேர் பாதிப்புகளில் இருந்து குணமடைந்து உள்ளனர் என்று அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது.

22 பேரில் 8 பேர் உள்ளூர்வாசிகள் ஆவர். மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து சீனா வந்தவர்கள். சீனாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 79,519 ஆக இருக்கிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட அறிகுறிகளற்ற 300 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது.