லடாக்: லடாக்கில் இன்று காலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவில் 3.6 அலகாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. அதிகாலை 5.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்க பாதிப்புகள் லடாக் பகுதிகளில் ஆங்காங்கே உணரப்பட்டதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதிக்குள்ளாகினா். ஆனால், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.