பரோடா:
குஜராத் மாநிலம் பரோடாவில் பணியாற்றி வந்த ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ தரப்பு வெளியிட்ட தகவலில், பரோடாவில் பணியாற்றி மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே நாளில் அவர்கள் மூன்று பேரும் ஒரே ஏடிஎம்-மில் பணம் எடுத்திருப்பதிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நேற்று புதிதாக 217 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுள்ளதுடன், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து குஜராத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 624-ஆக உயர்ந்துள்ளது.