சென்னை: தமிழகத்தில் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி, தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை முதன்மை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளராக கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக ஷன்சொங்கம் ஜடாக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.