ஸ்ரீநகர்,

ம்மு – காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாக் பயங்கரவாதிகளும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில், காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை வேட்டையாட சென்ற பாதுகாப்பு படையினர்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை வேட்டையாட தீவிரமாக களமிறங்கினர்.

அப்போது,  ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர்,  பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் துப்பாக்கிசூடு நடத்தினர்.

இந்த அதிரடி  தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிசூடு நடந்து வருகிறது