ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சில் செக்டார் பகுதியில் இன்று மாலை பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் அந்த பகுதியில் இருந்த ராணுவ முகாம் பனிச்சரிவுக்குள் சிக்கியது. இதில் 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.

மேலும் பனியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.