சென்னை,

10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய முயற்சி எடுத்துவருவதாக திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் நேற்று அறிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து, மும்மூர்த்தி எம்எல்ஏக்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நேற்று திண்டுக்கல்லில்  நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அமைச்சர்களுடன்  சபாநாயகர் தனபால், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர், ஆயுள் தண்டனை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளை சட்டம் மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.