திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோழிக்கோடு பெரம்பராவில் உள்ள மருத்துவமனையை சேர்ந்த 3 செவிலியர்கள் உடல் நிலை பாதித்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் நிபா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தனர் என்பது தெரியவந்தது. பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் இருந்து கோழிக்கோடு எம்சிஎச்.க்கு மாற்றப்பட்டுள்ளனர். செவிலியர்களுக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.