திருவள்ளூர்:

திருத்தணி அருகே கார் ரோடில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அத்திப்பட்டியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஓரத்தில் இருந்த கல்லின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி, புருஷோத்தமன் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.