ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே  ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து,  ஸ்ரீநகரின் பாட்டாமலூ என்ற பகுதியை காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎஃப் போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிக்க முயன்ற தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.