சென்னை:  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது.  அதிக பட்சமாக சென்னையில் 1249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத் தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 94 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,62,133 -ஆக உயர்ந்துள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு -பட்டியல்