சென்னை:  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,91,943  ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக  சென்னையில், 1,66,029 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில், குணமடைவோரின் எண்ணிக்கையும்  உயர்ந்து வருகிறது. சென்னையில் இதுவரை 1,51,641 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 11,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,195 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:

கோடம்பாக்கம் – 1,232 பேர்

அண்ணா நகர் – 1,197 பேர்

தேனாம்பேட்டை – 1,064 பேர்

தண்டையார்பேட்டை – 740 பேர்

ராயபுரம் – 859 பேர்

அடையாறு- 995 பேர்

திரு.வி.க. நகர்- 895 பேர்

வளசரவாக்கம்- 840 பேர்

அம்பத்தூர்- 790 பேர்

திருவொற்றியூர்- 261 பேர்

மாதவரம்- 444 பேர்

ஆலந்தூர்- 591 பேர்

பெருங்குடி- 494 பேர்

சோழிங்கநல்லூர்- 346 பேர்

மணலியில் 211 பேர்.