சென்னை:

மிழகத்தில்  இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  ஜூன் 1ந்தேதிமுதலே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தீவிரமடைந்து உள்ளன.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 1,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது.

இன்று பலியான 30 பேரில், தனியார் மருத்துவமனையில் 12 பேரும், அரசு மருத்துவமனையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 13 ஆம் நாளாக தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 194 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் 30 பெர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து  இந்த மாதத்தில் மட்டும் இதுவரை (13 நாட்களில்) 224 பேர் பலியாகி உள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.