சென்னை திருவேற்காடு கருமாரி அம்மன் திருக்கோயில் குறித்த  30  தகவல்

  1. கருமாரியம்மன் மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். அன்னை சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் அருளாட்சி செய்கிறாள்.
  2. அன்னைக்குப்பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது. இந்த அம்பிகை அக்னி ஜுவாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள்.
  3. தினமும் காலையில்கோபூஜைநடக்கிறது, மாலை பிரதோஷ வேளையில் அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது.
  4. அம்பாள் சன்னதியில் விளக்கு ஒன்று உள்ளது, இதனை “பதி விளக்கு’ என்கின்றனர். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன், சந்திரன் இருப்பது விசேஷமான அமைப்பு.
  5. மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் இருக்கிறது. இதில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறாள். இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது.
  6. பக்தர்கள் அம்பிகையையும், இந்த விளக்கையும் தரிசித்தால் குடும்பத்தில் என்றும் குறையில்லாத நிலை இருக்கும் என்பது நம்பிக்கை.
  7. கோயிலுக்கு வெளியில் “திருச்சாம்பல்பொய்கை” தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி எதிரில் அழகிய கொடிமரம் உள்ளது.
  8. பெரும்பாலான மாரியம்மன் தலங்களில் திருவிழாவின் போது, காப்புக்கட்டித்தான் விழா நடத்துவர். இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.
  9. பசு சாணத்தில் செய்த சாம்பலையே (திருநீறு) இக்கோயிலில்பிரசாதமாகத்தருகின்றனர்.
  10. முற்காலத்தில் இப்பகுதியில் நாக புற்று ஒன்று இருந்தது, இதனை மக்கள் வணங்கி வந்தனர். பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, புற்று இருந்த இடத்தில்தனக்குக்கோயில் கட்டும் படி கூறினாள்.
  11. பக்தர்கள்இங்குக்கோயில் எழுப்ப, புற்றைப் பெயர்த்தனர். அப்போது புற்றின் அடியில் அம்பிகை, சுயம்பு வடிவில் எழுந்தருளியிருந்தாள்.
  12. புற்றிற்குள் இருந்த நாகம், கோயில் கட்டும் போது அனைவரின் கண் முன்பாக வெளியேறியது.
  13. இந்த நாகம் ராஜகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது இவ்விடத்தில் பெரிய புற்று உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
  14. புற்றிற்கு அருகில் விநாயகர், நாகர் இருக்கின்றனர். பொதுவாக விநாயகர் வலது கையில் தந்தமும், இடக்கையில் மோதகமும் வைத்திருப்பார். இவர் வலது கையால் ஆசிர்வதித்து, இடது கையை அபய முத்திரையாக வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.
  15. அகத்தியருக்குக்காட்சி தந்த வேறுகன்னி அம்பாள் தனிச் சன்னதியில் காட்சி தருகிறாள்.
  16. இக்கோயிலில் மரத்தால் செய்யப்பட்ட சிலை வடிவில் கருமாரியம்மனுக்குதனிச்சன்னிதிஇருக்கிறது. அன்னையே “மரச்சிலை அம்மன்” என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
  17. அன்னையிடம் வேண்டிக் கொண்டால் வீட்டிற்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருப்பாள் என்பது நம்பிக்கை. எனவே அன்னையிடம் வேண்டி அருகிலுள்ள உண்டியலில் பூட்டு வைத்து வழிபடும் வித்தியாசமான வழக்கம் இருக்கிறது.
  18. பிரகாரத்தில் உற்சவ அம்பாள் ஊஞ்சலில் காட்சி தருகிறாள். அம்பிகை பால ரூபத்தில், சிம்ம வாகனத்துடன் நின்றிருக்கிறாள்.
  19. சீனிவாசபெருமாள் பத்மாவதி தாயார், ஆஞ்சநேயர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, அங்காள பரமேசுவரி, உச்சிஷ்ட கணபதி, காயத்ரி, மகாலட்சுமி, நவக்கிரகம் ராஜராஜேஸ்வரி, சாவித்திரி, துர்க்கை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
  20. கருமாரியம்மனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடக்கிறது. அமாவாசையில் இவளுக்கு மிளகாய் வத்தல் யாகம் நடக்கிறது.
  21. கோயில்களில் திருவிழா அதிகபட்சம் 15 நாட்கள் நடக்கும். அரிதாக சில அம்பாள் கோயில்களில் 48 நாட்கள் வரையில் விழா நடத்துவர். ஆனால், இக்கோயிலில் ஆடி முதல் வாரத்தில் துவங்கும் விழா புரட்டாசி மாதம் வரையில் மொத்தம் 12 வாரங்கள் நடக்கிறது.
  22. இதில் ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பிகைக்கு 108 குட அபிஷேகம் நடந்து வீதியுலா செல்கிறாள். 9ம் ஞாயிற்றுக்கிழமையன்று அம்பாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகிறாள்.
  23. மாசி மகத்தன்று அம்பாள் வங்காளவிரிகுடாகடலுக்குச் சென்று தீர்த்த நீராடுகிறாள். நவராத்திரி விழா. தை மாதம் பிரம்மோற்சவம், ஆடி மற்றும் புரட்டாசியில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.
  24. அம்பிகைக்குப்பாலபிஷேகம் செய்தும், அக்னி சட்டி எடுத்தும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
  25. தேவிகருமாரியம்மனைக்குல தெய்வமாக வழிபடுபவர்கள் இங்கும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
  26. தல விருட்சம்கருவேல மரம், தீர்த்தம் வேலாயுத தீர்த்தம்,காமீகம் முறைப்படி பூஜை செய்கின்றனர்.
  27. அருகில்வேதபுரிஸ்வரர்திருக்கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது.
  28. வைகாசி மாதம்சீனிவாசபெருமாளுக்குக் கருட சேவை சாதிக்கிறார்.
  29. அம்பிகைதானாகத்தோன்றியதால் இவளுக்கு, “கருவில் இல்லாத கருமாரி’ என்ற பெயரும் உண்டு.
  30. ஆலய முகவரி அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077, சென்னை. திருவள்ளூர் மாவட்டம்