சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது.

இன்று மட்டும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாஙர. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,322 ஆக அதிகரித்துள்ளது. இதில் 35 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 56 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,322 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,68,141 -ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 52,578 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,35,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.ர். சென்னையில்இன்று 19 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,729 ஆக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 48,13,147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் மட்டும் 75,100 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில், ஆண்கள் 2,58,370 பேரும், பெண்கள் 1,69,642 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதிற்குள் 19,748 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,52,674 பேரும், 60 வயதிற்கு மேல் 55,619 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு: