திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,215 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

தொடக்கத்தில் குறைவாக காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது கேரளாவில் அதிகமாகி வருகிறது. கேரளாவில் இன்று மட்டும் ஒரே நாளில் 3,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 466 பேராக உயர்ந்துள்ளது. 31,156 பேர் இன்னமும் கொரோனாவுக்கான மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவிலிருந்து இன்று மட்டும் 2,532 பேர் குணம் பெற்றுள்ளனர். இதுவரை 82,345 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.