புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரு நாளில்  370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு  8ஆயிரத்தை கடந்துள்ளது.

நாடு முழுவதும்  கொரோனா தொற்று நாளுக்கு நாளுக்கு நாள்  அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை  தாண்டி உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  மூணறை லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி  மாநிலத்தில் இன்று மேலும் 370 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுது. இதனால் கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,396 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.