டெல்லி:
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 37,724 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதால்,  பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. உலக அளவில் தொடர்ந்து 3 வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு குறித்து,  மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  11,92,915 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில்  648 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக  பலியானோரின் எண்ணிக்கை  28,732 -ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில், 4,11,133 பேர் கொரோனா தொற்றக்காக  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதவரை 7,53,050 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,27,031 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12,276 பேர் பலியாகியுள்ளனர்.
2வது இடத்தில் தமிகம் உள்ளது. இங்கு இதுவரை  1,80,643 பேர் பாதிக்கப்பட்ட உள்ளனர். , தலைநகர் டெல்லியில் 1,25,096 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 58,668 பேரும், கர்நாடகாவில் 71,069 பேரும், தெலங்கானாவில் 47,705 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 21- ஆம் தேதி வரை 1,47,24, 546 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் திங்கள்கிழமை (20ந்தேதி) மட்டும் 3,43,243 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.