சென்னை:
மிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று நிம்மதியை அளித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக   3,827  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 3,793 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை  நோய் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை  66,571 ஆக உயர்நதுள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 33,518 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
இன்று புதிதாக 61 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது
இன்று உயிரிழந்தவர்களில்  15 பேர் தனியார் மருத்துவமனையில்,  அரசு மருத்துவமனையில் 46 பேரும் அடங்குவர்.
மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக, சென்னையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.
அதற்க்கு அடுத்தபடியாக  செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மதுரையில் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனவால் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், சென்னையை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.