நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியில் ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

3rd

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. இதற்கு அடுத்ததாக நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுக்கும் விதமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பந்து வீச்சை’ தேர்வு செய்தார். இந்த போட்டியில் சஹாலுக்கு பதிலாக குல்தீப் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.