சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் பதவி ஏற்று, 2 ஆண்டுகள் முடிவடைந்து இன்று 3வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின், இன்று கடற்கரையில் அமைந்து உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவராக இருந்து வந்த கலைஞர் மு.கருணாநிதி மறைவைத் தொடர்ந்து,  திமுக தலைவ ராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். தலைவர் பதவியில் அவர் வெற்றிகரமாக  2 ஆண்டுகள் கடந்து இன்று 3வது ஆண்டை தொடங்குகிறார். அவருக்கு திமுக மூத்த தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக  தலைவராக பொறுப்பேற்று இன்று 3-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி  நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், சோதனைகளையும் சாதனைகளையும் எண்ணிப் பார்ப்பவனல்ல நான்; தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் சிறப்பாக தொடர்ந்து செயல்படுவேன்”  என்று சூளுரைத்துள்ளார்.