கோஹிமா: நாகலாந்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மணிப்பூரில் நிலநடுக்கம் பதிவானது.

இந் நிலையில் இன்று காலை 8.59 மணியளவில் நாகலாந்து மாநிலத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. மோகோக்சுங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறி உள்ளது.