சென்னை:

காலியாக உள்ள  திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி சூலூர்  ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவித்துள்ள நிலையில், 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும்  மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதி யில் போட்டியிடும்  திமுக  வேட்பாளர்கள்  மற்றும் டிடிவியின் அமமுக கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று அதிமுக வேட்பாளரை அறிவித்து உள்ளது.

முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி, 4 தொகுதியிலும் போட்டியிட விரும்பும் அதிமுகவினர்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து வேட்பாளர் நேர்காணலையும் முடித்த நிலையில், இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி

சூலூர் – வி.பி.கந்தசாமி

அரவக்குறிச்சி – வி.வி.செந்தில்நாதன்

திருப்பரங்குன்றம் – எஸ்.முனியாண்டி

ஓட்டபிடாரம் – பெ.மோகன் (முன்னாள் எம்எல்ஏ)

ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.