சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் 4 தொகுதி களுக்கும் மே 19ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு ஏப்ரல் 22ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.
இடையில் 27, 28ந்தேதி (சனி, ஞாயிறு) விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (ஏப்ரல் 29ந் தேதி) கடைசி நாள்.
அதைத்தொடர்ந்து நாளை வேட்பு மனுக்கள் மதான பரிசீலனை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு மே 19ந்தேதி நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை மே 23ந் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறை வடையும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி தலைவர்கள் மே1ந்தேதி முதல் தங்களது பிரசாரத்தை தொடங்குகின்றனர்.