சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.

இந்த தொகுதிகளில், பொதுவிடுமுறை நாளான வரும்  27, 28ந்தேதி வேட்புமனு பெறப்படாது என தமிழக தலைமை  தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில்,  ஏப்ரல் 22ந் தேதி முதல்  நான்கு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து வேட்பு மனுக்கள் மதான பரிசீலனை ஏப்ரல் 30ந் தேதி  நடைபெறுவதாகவும், மே 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 23ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை 26ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்வதை தவற விட்டால் 27, 28ந்தேதிவிடுமுறையை தொடர்ந்து 29ந்தேதி திங்கட்கிழமை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.