ரத்னகிரி :
காராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

லோட்-பர்சுராம் எம்ஐடிசி வளாகத்தில் உள்ள கார்டா கெமிக்கல்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் காலை 9.15 மணியளவில் தீப்பிடித்தது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை கட்டுபடுத்தனர்.

இதுகுறித்து கெட் காவல் நிலைய அதிகாரி மேலும் தெரிவிக்கையில், “இந்த கெமிக்கல் தொழிற்சாலையின் உள்ளே சிக்கி கொண்ட ஐந்து தொழிலாளர்களில் ஒருவரை மீட்க முடிந்தது. மேலும் நான்கு பேரின் எரிந்த உடல்கள் பின்னர் இந்த நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.

காயமடைந்த தொழிலாளி சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இறந்த நான்கு பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனை மற்றும் பிற சம்பிரதாயங்களுக்காக சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.