மிழகத்துக்கு 4 விரைவு ரயில்கள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. புதிய ரயில்கள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள்ளாக பயன்பாட்டுக்கு வரும்.
புதிய விரைவு ரயில்கள்:

பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) – தாம்பரம் வாராந்திர ஹம்சவர் விரைவு ரயில்

ரயில் எண் 14815/15816: ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோத்தி ரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமை பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

அதேபோல, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பகத் கி கோத்தி ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

தாம்பரம் – திருநெல்வேலி தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்

ரயில் எண் 16191: தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ரயில் எண் 16192: திருநெல்வேலியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம் – செங்கோட்டை தினசரி முன்பதிவில்லா ரயில்

ரயில் எண் 16189: தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு செங்கோட்டைக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண் 16190: செங்கோட்டையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல் – மதுரை ஏசி அதிவிரைவு வாராந்திர ரயில்

ரயில் எண் 20601: சென்னை சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரை சென்றடையும்.
ரயில் எண் 20602: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 7.40 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நீட்டிக்கப்படும் விரைவு ரயில் சேவைகளின் விவரம்
(நவ. 1 முதல் அமல்)

சென்னை சென்ட்ரல் – பழனி விரைவு பாலக்காடு வரை நீட்டிப்பு

ரயில் எண் 22651/22652: சென்னை சென்ட்ரல் – பழனி விரைவு ரயில் பாலக்காடு வரை பொள்ளாச்சி வழியாக செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைபுதன்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு காலை 7.15/7.20 மணிக்குச் சென்றடையும்.

பின்பு, பொள்ளாச்சிக்கு 9/ 9.05 மணிக்கும், பாலக்காட்டுக்கு காலை 11 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு மாலை 4.25/4.30-க்கு, பழனிக்கு மாலை 5.55/ 6 மணிக்கு, பின்பு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 4.15 மணிக்கு வந்தடையும்.

திருவனந்தபுரம் – பாலக்காடு அம்ரிதா விரைவு ரயில் மதுரை வரை நீட்டிப்பு
ரயில் எண் 16343/16344:திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடுக்கு காலை 7.45/7.50, பின்பு மதுரைக்கு பிற்பகல் 1.10 மணிக்கு சென்றடையும். மறுமார்கத்தில், மதுரையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடுக்கு இரவு 9.15/9.20, பின்பு திருவனந்தபுரத்துக்கு மறுநாள் காலை 6.25 மணிக்கு சென்றடையும்.

சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு கொல்லம் வரை நீட்டிப்பு

ரயில் எண் 16723: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரத்துக்கு மறுநாள் காலை 11.40/11.45 மணி, பின்பு கொல்லத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு மாலை 4.05/4.10 மணி, பின்பு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 8.05 மணிக்கு வந்தடையும்.

ரயில் எண் 16179/16180: சென்னை எழும்பூரில் இருந்து தினசரி மன்னார்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் இனி தஞ்சாவூரில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீடாமங்கலத்தில் நிறுத்தப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு நீடாமங்கலம் அதிகாலை 3.38/3.40 மணி, பின்பு மன்னார்குடி காலை 4.45 மணி. மறுமார்கத்தில், மன்னார்குடியில் இருந்து இரவு 10.25 புறப்பட்டு, நீடாமங்கலம் இரவு 10.38/10.40 மணி, பின்பு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 5.45 மணிக்கு வந்தடையும்.