ஸ்ரீநகர்:

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட வீரர்கள் பலியாகினர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இத்றகு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் உள்ள கெரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியாவை சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் வலுவான பதிலடி கொடுத்துள்ளது.