பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டது.

மாநிலம் தழுவிய 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. எனினும் கர்நாடகாவில் கொரோனா நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.

இன்றும் கொரோனா நோயாளிகள் விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, புதியதாக 4 கொரோனா நோயாளிகள் இன்று கண்டறியப்பட்டுள்ளனர்.

பாகல்கோட்டில் 75 வயது முதியவர், பெலகாவியில் 70 வயதுடையவர் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. மேலும் பெலகாவியைச் சேர்ந்த 26 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெலகாவியை சேர்ந்த மூவர், டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.