மும்பை:
போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

மும்பையில் மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப வன்பொருள் வாங்கியதாக சமர்பிக்கப்பட்ட ஆவணத்தில் ரூ. 6.76 கோடி மதிப்பிலான ஆவணங்கள் போலி என தெரிய வந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,இந்த வழக்கில் கேப்டன் அதுல் குல்கர்னி, தளபதிகள் மந்தர் கோட்போல் மற்றும் ஆர்.பி. சர்மா மற்றும் எல்.ஓ.ஜி குல்தீப் சிங் பாகேல் மீது விசாரணை நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளனர்