இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “உள்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை துணை செயலாளராக இருந்த முருகேஷ், வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் முன்பு இருந்த ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல், ஆளுநரின் செயலாளராக மாற்றப்பட்டார். சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளராக உள்ள கார்த்திகேயன், குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் பதவியை கூடுதலாக கவனிப்பார்.

பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஜெய்னுலாப்தீன், வக்பு போர்டு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் முன்பு இருந்த முகமது அஸ்லம் பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.