டெல்லி: அசாமில் மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 68.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. அதிகபட்சமாக அசாமில் தற்போதைய நிலவரப்படி 68.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கேரளா மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 4 மணி நிலவரப்படி, 58.66 சதவீதம் வாக்குகளாக  பதிவாகியுள்ளது.

அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. அம்மாநிலத்தில் இன்றைய 4 மணி நிலவரப்படி 68.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில்  இன்று நடைபெற்று வரும் 3ம் கட்ட வாக்குப்பதிவில் 4 மணி நிலவரப்படி 68.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.