ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில்  லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 4 பேர் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அவர்கள், முன்ஹால் என்ற இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வீடு ஒன்றில் பதங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே 1 மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

விசாரணையில் 4 பேரும் லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. தீவிரவாதிகள் பதுங்கிய வீட்டில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.