சென்னை:

சென்னை விமான நிலையத்தில் கழிப்பிடத்தில் அனாதையாக கிடந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பிடத்தில் ஒரு பெட்டி கேட்பாரற்று அனாதையாக கிடந்தது. தகவலறிந்த சுங்கத்தை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெட்டியை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் ரூ.12 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து சுங்கத்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பஹ்ரைன் பயணி ஒருவர் விட்டுச் சென்றிருப்பது தெரியவந்தள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.