நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 40 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 40 மீனவர்களை கைது செய்த அவர்கள், மீனவர்களிடம் இருந்து விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

அத்தோடு மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வரும் கடலோர காவல்படையினர், நாளை அவர்களை நாகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.