ஈரோடு: தமிழகத்தில், பள்ளி மாணவர்களின்  40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டு உள்ளன. தற்போது ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், கொரோனா தொற்று காரணமாக, மாணவர்களின் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்து, அதற்காக கல்வி யாளர்கள் கொண்ட குழுவை தமிழகஅரசு நியமனம் செய்ததது.

இந்த குழுவினர், பாடத்திட்டங்களை குறைக்க பரிந்துரைத்துள்ளது. அதன்ப அடிப்படையில்  40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசியவர்,  நடந்து முடிந்த  நீட் தேர்வில் , மாநில அரசின்  பாடத்திட் டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தவர், எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கு வோம் என்றார்.

மேலும்,  தமிழகத்தில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும்,  குழு அளித்துள்ள  அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது,  சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.