சென்னை:

மிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளின் விரிவாக்கப் பணிக்கு தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கி அரசாணையை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, கோவை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கி  இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இந்த நிதியைக்கொண்டு 3 அரசு மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்யவும், நவீன வசதிகள் ஏற்படுத்தவும் நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.144 கோடியும், மதுரைக்கு ரூ.131 கோடியும், கோவைக்கு ரூ.124 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.