போர்ட்டோ பிரின்ஸ்: ஹைதி நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓட, சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் தலைநகர் போர்ட்டோ பிரின்ஸ் எனும் பகுதியில் சிறைச்சாலை உள்ளது. அதில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்த சிறைச்சாலையில் திடீரென ஏற்பட்ட கலவரத்தால் கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காவலர்கள் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும், நிலைமை கை மீறியது.

கலவரத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிவிட்டனர். மேலும் கலவரத்தில் சிறைத்துறை அதிகாரிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஹைதி சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சிறையிலிருந்து தப்பி சென்றவர்களை பிடிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.