சென்னை: கொரோனா சிகிச்சை வழங்க நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

 

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிர் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்கு தற்காலிக பணிக்காலம் நிறைவடைகிறது.

கொரோனா அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மற்றும் தேவை கருதி அவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.