காபூல்

ஃப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் மாநிலத்தில் தாலிபன் தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்

ஆஃப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த போராட்டத்தில் தாலிபன்கள் அடிக்கடி ஆஃப்கானிஸ்தான் ராணுவ வீரர்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.  இதனால் ராணுவத்தினர் பலர் இந்த தாக்குதல்களில் பலி ஆகி வருகின்றனர்.

தெற்கு ஆஃப்கானிஸ்தானில் கந்தகார் மாநிலத்தில் தாலிபன்கள் ஒரு ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி உல்ளனர்.  இந்த தாக்குதலில் இரண்டு தற்கொலை கார் குண்டு வெடிப்பும் நிகழ்ந்துள்ளது.  இரு தர்ப்பினருக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் ஆஃப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் சுமார் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதே நேரத்தில் வடக்கு ஆஃப்கானிஸ்தான் பால்க் மாநிலத்தில் நேற்று பிற்பகல் நடந்த ஒரு தாலிபன் தாக்குதலில்  ஆறு போலீசார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.