சென்னை:

ஜூன் 15 ஆம் தேதி  பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக  43 லட்சம் முகக்கவசங்கள் தயாராக இருப்பதாகவும், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கபடும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,  பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்,.

மேலும்,  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக முக்கவசம் வழங்கப்படும் என்று கூறியவர், அதற்காக  43 லட்சம் முகக்கவசங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.