சென்னை:

மிழகத்தில்  43-வது புத்தக கண்காட்சி சென்னையில் நாளை தொடங்குகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஆண்டு தோறும் ஜனவரி மாதம்  சென்னையில் புத்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 42 முறை நடைபெற்றுள்ள நிலையில், 43வது சென்னை புத்தக்க கண்காட்சி நாளை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த கண்காட்சியை நாளை மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தொடங்கி வைக்கிறார்.

இந்த புத்தக கண்காட்சியான ஜனவரி 21ம் தேதி வரை தொடர்ந்து  13 நாள்கள் நடைபெற உள்ளது.

சாதாரண வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் 9 மணி வரையிலும் இந்தக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.