டில்லி

டாடாவின் ஜாகுவார் லாண்ட் ரோவர் வாகன உற்பத்தி நிறுவனம் உலகெங்கும் உள்ள தனது தொழிலாளர்களில் 4500 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளது.

பிரிட்டனில் அமைந்துள்ள ஜாகுவார் லாண்ட் ரோவர் வாகன உற்பத்தி நிறுவனம் இந்திய நாட்டை சேர்ந்த டாடா குழுமத்துக்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனம் பிரிட்டனில் மட்டுமின்றி சீனா, பிரேசில், ஆஸ்டிரியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளிலும் தொழிற்சாலைகள் உள்ளன. அத்துடன் இந்தியாவில் புனே நகரில் இந்த நிறுவனத்தின் அசெம்பிளி தொழிற்சாலை உள்ளது.

இவற்றில் சீனாவில் உள்ள தொழிற்சாலை மிகவும் பெரியதாகும். இந்த தொழிற்சால கட்னத 2014 முதல் இயங்கி வருகிறது. இதில் சுமார் 4000 ஊழியர்கள் ஆரம்பத்தில் பணி புரிந்தனர். சமீபத்தில் பிரிட்டன் இங்கிலாந்து நாடுகள் அமைப்பில் இருந்து வரும் பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் விலகுவதாக அறிவித்தது. இதனால் சீனா உள்ளிட்ட நாடுகளில் பிரிட்டன் நிறுவனங்களை நாட்டில் இருந்து வெளியேற்றி வருகிறது.

சீனாவில் ஜாகுவார் லாண்ட் ரோவர் வாகனங்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வரும் வேளையில் அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை மூட வேண்டிய நில உருவாகி இருக்கிறது. ஆகவே இந்த தொழிற்சாலை மூடப்படும் என அறிவித்துள்ளது. ஆகவே சீனத் தொழிற்சாலை பணியாளர்கள் உட்பட உலகெங்கும் சுமார் 4500 பணியாளர்களை இந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்ய உள்ளது.