டெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக மேலும்,  48,916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 48,916 பேருக்கு  தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13, 36,861 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில், 757  பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 31,358 -ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக  4,56,071 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 8,49,431பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 24- ஆம் தேதி வரை நாடு முழுவதும்  1,58,49,068 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் வியாழக்கிழமை (24ந்தேதி)  மட்டும் 4,20,898 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.