அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. 3 போட்டிகள் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

தற்போது, அகமதாபாத் மைதானத்தில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தற்போதைய நிலையில், அந்த அணி 10 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. டாப் சிப்லியை, அக்ஸார் படேல் பெளல்டு ஆக்கியுள்ளார்.

இந்தப் போட்டியில், இந்திய அணி டிரா செய்தாலே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று விடலாம்.