லடாக்: லடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 5.3 ஆக பதிவானது.

யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை 10.54 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியது. இது குறித்து தேசிய புவியியல் மையம் தெரிவித்து இருப்பதாவது:

நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள்  வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பொருட்சேதம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாக வில்லை.