புதுடெல்லி:

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லும் அவல நிலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மே 1 முதல் மையம் சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியதிலிருந்து சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.  பல்வேறு ரயில் நிலையங்களில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் ரயில்களில் சென்று பல புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர். நேற்று, ஒரு குழந்தை தனது இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் இதயத்தை உடைக்கும் வீடியோ வைரலாகிவிட்டது. இந்த விவகாரத்தில் பதில்களை தாக்கல் செய்யுமாறு மத்திய மாநிலங்களையும் கேட்ட நீதிமன்றம், புலம்பெயர்ந்தோரின் போக்குவரத்து மற்றும் அவர்களுக்கு உணவு வழங்குதல் என்பதே முக்கிய பிரச்சினையாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தது.

புலம்பெயர்ந்தோர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் முக்கிய சாராம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

  • மாநில அரசுகள் எப்போது ரயில்வேயிடம், ரயில்களை அனுப்புமாறு கேட்டு கொண்டது. இதையடுத்து ரயில்வே எப்போது ரயில்களை அனுப்பியது என்பது தெளிவு படுத்த வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ரயில் அல்லது பஸ் கட்டணம் வசூலிக்க கூடாது. இந்த கட்டணத்தை மாநில அரசுகளே செலுத்த வேண்டும்
  • வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட அரசு உணவு வழங்க வேண்டும். இந்த இடத்தில் உணவு வழங்கப்படுகிறது என்று அந்தந்த அரசுகள் விளம்பரப்படுத்தப்பட்ட வேண்டும்.
  • ரயில் பயணத்தின் போது, ​​எந்த மாநிலங்கள் அவர்களை அனுப்பி வைக்கிறதோ, அந்த மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு
    உணவு மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும். இதே போன்று ரயில்வேயும் தன் பங்குக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும். பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.
  • சொந்த ஊருக்கு திரும்ப பதிவு செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அவர்களது பயணம் குறித்து முழுமையான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலைகளில் நடந்து செல்வதைக் கண்டால் உடனடியாக அவர்களை தங்குமிடங்களுக்கு அழைத்துச் சென்று உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.