குட்டிபுரம் ரெயில் நிலையம்

கொச்சி

கொச்சி அருகே ரெயில் பாலத்தின் அடியில் 5 இரும்புப் பெட்டிகளில் வெடி பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

கேரளாவில் கொச்சியில் இருந்து 130 கிமீ தூரத்தில் உள்ளது.  குட்டிப் புரம்.   இங்குள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் ஒரு சிறுவன் ஆற்றாங்கரை ஓரமாக நடந்து சென்றுள்ளார்.   அப்போது பாலத்தின் அடியில் கவனிப்பாரற்று 5 பெட்டிகள் இருப்பதைக் கண்டு ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஊர் மக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.   அப்போது அவர்கள் அந்த ஐந்து பெட்டிகளிலும் வெடிப் பொருட்கள் உள்ளதை கண்டு பிடித்துள்ளனர்.   அந்த வெடிப்பொருட்களை ஆய்வு செய்யவும் செயலிழக்கச் செய்யவும் சென்னையில் உள்ள தேசிய பாதுகாவலர்கள் கேரளா காவல்துறையினரால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு அடங்கிய பெட்டிகள் குறித்து கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.