டில்லி:

யில் நிலைய கவுண்டரில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 5 சதவீதம் கட்டண சலுகை அளிக்க இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகை வரும் ஏப்ரல் 2 ந்தேதி  முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால், இணைய தளம் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இந்த சலுகை கிடையாது என்றும் அறிவித்து உள்ளது.

ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு, ‘டிஜிட்டல்’ முறை யில், யு.பி.ஐ. வசதியில் (பீம் ஆப்)  பணப் பரிமாற்றம் செய்து, டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, அடிப்படை கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த, ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் ஏப். 2ந்தேதி  முதல், மூன்று மாதத்துக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் சலுகை பெற வேண்டுமானால் 100 ரூபாய்க்கு அதிகமான  அளவில் கட்டணம் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்த சலுகை அதிகபட்சமாக ரூ.50 வரை மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

மாதாந்திர சீசன் டிக்கெட்,  இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது என்றும்  ரயில்வே அறிவித்துள்ளது.