பாட்னா:
பீகார் மத்தியச் சிறையில் இருந்து 5 பேர் தப்பியோடி விட்டனர். இச்சமபவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


பக்சர் மாவட்ட ஆட்சியர் ரமண் குமார் கூறுகையில், 5 கைதிகளும் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 12 மணி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தப்பியோடி விட்டனர். சிறைச்சாலையின் சுவர் மீது ஏறி அவர் தப்பியுள்ளனர் தப்பிச் சென்ற 5 கைதிகளில் 4 பேர் ஆயுள் தண்டனை கைதிகள்.

ஒருவர் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்றார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமை வார்டன் காமேஸ்வர் பாஸ்வான், வார்டன்கள் உபேந்திர தாஸ், ராஜ் குமார் ராம் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.